Wednesday, March 21, 2012

கையெழுத்து !!!

எவ்ளோ நாளாச்சு ஒரு கடுதாசி போட்டு?

எப்போ பாத்தாலும் இந்த கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து தட்டிக்கிட்டே இருக்க வேண்டியது! முன்னாடி எல்லாம் பள்ளிக்கூடத்தில எழுத சொன்னப்ப, நோகும். ஆனா இப்போ கம்ப்யூட்டர்ல தட்டும் போது மட்டும் வெரலு வலிக்கலையா? வலிக்குது தான். அதையும் தாண்டி எதுக்கு தட்டறோம்? வயித்து பொழப்பு சாமி :-)

சரி, வேலையைத்தான் கம்ப்யூட்டர் ல தட்டி தட்டி செய்யணும். மனசுல இருக்கறத சொல்லணும்னாலும் இந்த இ-மெயில் தான் அனுப்பணுமா?

கொஞ்சம் வித்தியாசமா கையில எழுதி குடுத்து பாருங்களேன், அந்த கடுதாசிய :-)

அந்த சந்தோஷமே தனி தான்... எழுதறவருக்கும் படிக்கிறவருக்கும்! அது மட்டும் இல்ல... பொக்கிஷம் மாதிரி வெச்சிருப்பாங்க அந்த கடுதாசிய :-)

ஒரு தடவ முயற்சி பண்ணி பாருங்க.. அப்புறம் நீங்களே விட மாட்டீங்க :-)

Friday, March 9, 2012

விரதம் !!!



இன்னிக்கு என்ன விரதம்? வெள்ளிக்கிழமை விரதமா? சந்தோஷிமா விரதமா? சஷ்டி விரதமா?

ஆமாம்? எதுக்கு விரதம் இருக்கீங்க? நல்ல வேலை கெடைக்கவா? கல்யாணம் சரியாகணுமா? கொழந்த வேணுமா? மன த்ருப்திக்காகவா?

வேண்டுதல் ஏதுவா வேணுமானாலும் இருக்கட்டும். ஆனா, ஏன் விரதம் இருக்கணும்? சாப்பிடாம இருந்து கேட்டாத்தான் சாமி குடுப்பாரா? நம்ம சாமிக்கு எதுக்கு இவ்ளோ சிறுபிள்ளைத்தனம்?

இது சாமி சொல்லலை... ஆசாமி சொன்னது... அப்படின்னு நான் நம்பறேன். எப்பிடின்னு கேளுங்க!

நம்ம பாட்டுக்கு தினமும் வகை வகையா சாப்பிட வேண்டியது... அப்புறம் அங்க வலிக்குது... இங்க வலிக்குது ன்னு பொலம்ப வேண்டியது... நமக்கு வாரத்துல ஒரு நாள் ஓய்வு வேணும்னு நினைக்கிறோமே... அதே மாதிரி நம்ம ஒடம்புக்கு வேண்டாமா? அதுக்கு தான் நம்ம தாத்தா பாட்டிங்க எல்லாருமா சேந்து இப்பிடி ஒரு வழி கண்டு பிடிச்சாங்க.

நம்ம தான் சும்மா சொன்ன எதையுமே செய்ய மாட்டோமே! அதுக்கு தான் கூப்பிட்டாங்க நம்ம சாமிய, தொணைக்கு! சாமி பேர சொன்ன ஒடனே எல்லாரும் விதம் விதமா விரதம் இருக்கோம் பாத்தீங்களா!

இப்போ சமீபத்துல லண்டன்-ல ஒரு ஆராய்ச்சி செஞ்சி விஞ்ஞானிகள் எல்லாரும் கண்டுபிடிச்ச விஷயம் இது தான்: சாப்பிடாம இருக்கும் பொழுது, நம்ம மூளைல சுரக்கக்கூடிய ஒரு திரவம், நம்ம மூளையோட செயல் திறனை அதிகப் படுத்துதாம். இது எப்டி இருக்கு?

நம்ம தாத்தா பாட்டி எல்லாம் சும்மா இல்ல... செம மூளை... அதான் பல ஆயிரம் வருஷம் முன்னாடியே இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி, நம்மள எப்பிடி சொன்னா கேப்பமோ அப்பிடி சொல்லி இருக்க வெச்சிருக்காங்க, விரதம்!!!

சரி... வாங்க இருக்கலாம், விரதம்!!!

Wednesday, February 8, 2012

திருநீறு !!!



கோவிலுக்கு போனோமா... சாமிய பாத்தோமா... கெளம்பினோமான்னு இல்லாமே, அதென்ன இடையிலே திருநீறு வெக்கிறது?

திருநீறுன்னா என்ன? எப்பிடி தயார் பண்றாங்க? எதுக்கு வெக்கிறோம்? சாமிக்கும் திருநீறுக்கும் என்ன சம்மந்தம்? 

இப்பிடி நெறைய கேள்வி மனசுல... தேடினேன் பாருங்க.... தேடினதுல ரெண்டு எடத்துல திருப்தியான பதில் கெடச்சுது... ஒண்ணு நம்ம விக்கிபீடியா, இன்னொண்ணு சாந்தன்.காம்

நீங்களும் படிச்சு பாருங்க... என்ன யோசிக்கறீங்க? என்னடா... சொந்தமா யோசிக்காம கடன்ல யோசிக்கறேன்னா? அட.... நல்லத யார் சொன்னா என்ன.... என்ன நான் சொல்றது?! சரி... அடுத்த நல்ல விஷயம் தேடி படிக்க போறேன்... படிச்சிட்டு வந்து சொல்றேன்...

Friday, February 3, 2012

கண் திருஷ்டி !!!



கண்ணு படப் போகுதா? எனக்கா? சீக்கிரம் சுத்தி போடுங்க !!!

அதென்னது சுத்திப் போடறது ?! எத சுத்திப் போடணும்?! ம்ம்... சொல்றேன்.

ஒரு மனுஷன் வாழ்க்கைல கொஞ்சம் சந்தோஷமா, நல்ல வேலை/தொழில், நல்ல குடும்பம் அப்படி இப்படி னு இருந்தா, ஒடனே அத பாத்து கொஞ்சம் ஏங்குறவங்க இருப்பாங்க... "அடடா அவன மாதிரியே நமக்கும் எல்லாம் நல்லா நடந்தா நல்லாருக்குமே" ன்னு. இன்னும் சில பேர் எப்படி யோசிப்பாங்க தெரியுமா? "ஹ்ம்ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருக்கு.... ஆனா என்னமோ தப்பு இருக்கு... சரி இல்ல... இதெல்லாம் எங்க நிலைக்க போகுது..." இது எப்படி இருக்கு?!

இந்த மாதிரி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அந்த மனுஷன பாப்பாங்க. இந்த பார்வையத்தான் "கண் திருஷ்டி" ம்பாங்க. இப்படி பாக்கறதால அவங்களோட கெட்ட அதிர்வுகள் (Negative Vibes) அந்த மனுஷனுக்கும் போய் சேருது. சில சமயங்களில், அது அவனை பாதிக்கலாம், சில சமயங்களில் பாதிக்காமலும் போகலாம். அது அவனுடைய மனோபலத்தை பொருத்ததாம் !!!

இந்த கண் திருஷ்டிக்கு நம்ம தாத்தா பாட்டிகள் தேடின வழி தான் "கண் திருஷ்டி கழிக்கறது". அதாவது நம்மள சுத்தி இருக்க கெட்ட அதிர்வுகள உப்பு, மிளகு மாதிரியான கிருமி நாசினி பொருட்களைக் கொண்டு சுத்தி எடுத்து வீசிடலாம்னு அவங்க நம்பினாங்க. நம்பினதையே செஞ்சும் பாத்தாங்க. அது ஓரளவுக்கு பலன் கொடுக்கவே, நம்மளும் அவங்க செய்தத தொடர்ந்து செய்யறோம்.

முடியல என்னால !!! யாராவது எனக்கு கொஞ்சம் சுத்திப் போடுங்களேன் !!!

விளக்கு !!!



விளக்கு வைப்போமா ?

ஏன்? எதுக்கு? விளக்கு வெச்சாத்தான் சாமி வீட்டுக்கு வருமா? இப்பிடியே கேள்வி கேட்டே காலம் கடத்திருவோம்... ஹ்ம்ம்ம்...

பதில் தேடுவோமா? நம்ம தேடிட்டோம்லே... தேடிப்புடிச்சி படிச்சதில புரிஞ்சது இது தான்.

வெளிச்சம் ஞானத்தையும் இருட்டு அஃஞானத்தையும் குறிப்பது. வெளிச்சம் வந்தா இருட்டு விலகறது மாதிரி ஞானம் அஃஞானத்தை விலக்கிடுது!

இப்போ, சாமி தான் எல்லாம் தெரிஞ்சவராச்சே! அப்போ, சாமி = ஞானம். ஆனா, ஞானம் = வெளிச்சம் ஆச்சே ! அதனால சாமி = வெளிச்சம். அதனாலதான் விளக்கு ஏத்தி வெச்சு நம்ம மனசுல இருக்க இருட்டு எல்லாம் போக்கணும் சாமி-ன்னு வேண்டிக்கறோம்.

ஆனா, எந்த விளக்கு போட்டாலும் தானே இருட்டு போகுது? எதுக்கு எண்ணெய் விளக்கு வெக்கணும்? ம்ம்ம்... அதாவது, எண்ணெய் விளக்குல நாம விடற எண்ணெய், நம்முடைய தீய எண்ணங்கள். திரி, நம்முடைய அகங்காரம். நாம விளக்கு வெக்கும்போது, வெளிச்சமாகிய ஆன்ம ஞானம் நம்முடைய தீய எண்ணங்களை (எண்ணெய்) மெல்ல அழித்து, அகங்காரத்தையும் (திரி) கடைசில அழிச்சிடும். இதுக்கு தான் எண்ணெய் விளக்கு வெக்கிறது.

ஒரு சின்ன விளக்கு வெக்கிறதுக்கு இவ்ளோ பெரிய உள்ளர்த்தம். ம்ம்ம்ம். சரி, நான் போய் விளக்கு வெச்சிட்டு வர்றேன். அடுத்தது எத பத்தி எழுதறதுன்னு ஞானம் வருதான்னு பாப்போம் !!!

Friday, January 27, 2012

கோலம் !!!




வீட்டு வாசல்லே கோலம் போட்டு எவ்வளவோ காலம் ஆச்சு !!! ஹ்ம்ம்ம்...

ஆமாம்... ஏன் கோலம் போடறோம்? அம்மா கிட்ட கேட்டேன். சின்ன வயசிலேயே கேட்டேன். அம்மா சொன்னாங்க, "எறும்பு, பூச்சி, காக்கா, குருவி எல்லாம் சாப்பிடறதுக்காக" - ன்னு !!! நான் கேட்டேன் "அதுக்கு எதுக்கு கோலம் போடணும்? சாப்பாடு வெச்சிட்டு போலாமே?". எப்புடி புத்திசாலித்தனமா கேள்வி கேட்டு மடக்குனேன் பாருங்க எங்கம்மாவ !

எங்கம்மா எனக்கு அம்மா இல்லையா ! அதனால என் களிமண் மூளைல பதிஞ்சு போற மாதிரி வெளக்கம் சொன்னாங்க. 

"சின்ன சின்ன ஜீவ ராசிக்கெல்லாம் தானியம் தான் சரியான சாப்பாடு. அதுக்காக தினமும் கொஞ்சம் தானியத்தை கொண்டு போய் கொட்டி வெச்சு அதுங்கள சோம்பேறி ஆக்க வேணாம். எப்பவும் போல தேடி தேடி சாப்பிடட்டும், ஆனா கொஞ்சம் கஷ்டமில்லாம தேடி சாப்பிடட்டுமேன்னு தான் தானியமான அரிசிய பொடி பண்ணி, சாப்பாடு மாதிரி குமிச்சு வெக்காம, வளைச்சு வளைச்சு போட்டு வெக்கிறோம். அதுவே வீட்டு வாசல்லே போடறதுனாலே, அழகா சீரா போடறோம். பாக்கவும் நல்லாருக்கும், சின்ன சின்ன ஜீவ ராசிங்களுக்கு பசியாத்தின மாதிரியும் இருக்கும்."

ம்ம்ம்... அம்மா சொன்னது சரியாத்தானே படுது. தேடி புடிச்சு படிச்சும் பாத்தேன். இதையேத்தான் அவங்களும் சொல்றாங்க. சரி... நல்லதுக்கு தானே சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க... முடிஞ்ச வரைக்கும் போடுவோம், கோலம்.

Thursday, January 26, 2012

பிள்ளையார் சுழி !!!




பிள்ளையார் சுழி போட்டாச்சு :-)

நான் மட்டுமா பிள்ளையார் சுழி போடுறேன்? ஊரே போடுது :-) ஏன் பிள்ளையார் சுழி போடுறோம்னு சொல்லட்டுமா ? நான் படிச்சதை சொல்றேன் கேட்டுக்கோங்க !!!

ஓலைச்சுவடி எழுதின காலத்தில, "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" - ன்னு எழுதிட்டு தான் எழுத ஆரம்பிச்சாங்க. அதுவே கொஞ்ச காலம் கழிஞ்சு, "அறிவோம்"- ங்கற வார்த்தை "அரி ஓம்" ஆச்சு !!! கொண்டு வந்துட்டாங்களா இங்கயும் சாமிய :-) ஆனா ஒண்ணு ! அந்த காலத்துல, பாட்டு எழுத ஆரம்பிக்கும்போதும், பாட்டு எழுதி முடிக்கும் போதும், பாட்டுக்கு எண்ணிக்கை போடும்போதும் கூட பிள்ளையார் சுழி போட்டாங்க !!!

இப்படி ஒரு பக்கம் சொல்றாங்க! இன்னொரு பக்கமும் இருக்கில்ல! அவங்க என்ன சொல்றாங்கன்னா, ஓலைச்சுவடியுடைய பதம் பார்க்க ஒரு சுழியப் போட்டு ஒரு கோடு போட்டு பாத்தாங்களாம். இது எப்படி இருக்கு?

ரெண்டுமே சரியாத்தான் படுது!!! நம்ம எப்பவுமே தெளிவா இருப்போம் இல்லையா ?!?!

சரி. இதுலே எங்கே பிள்ளையார் வந்தார்? யாருக்குமே தெரியலை! எல்லா விஷயத்துலயும் சாமி பெயர் சொல்லி செய்ய வெச்ச நம்ம தாத்தா பாட்டிக்கு, இது ஒரு பெரிய விஷயமா? இங்கயும் கொண்டு வந்துட்டாங்க சாமியை :-)

ஏன் சொல்றேன்னா... நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் பிள்ளையார கும்பிட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே... கல், மரம், ஓலைச்சுவடி எல்லாத்துலயும் எழுதவும் ஆரம்பிச்சிட்டிருந்தாங்களே !!!

சரி... பிள்ளையார்னு நெனச்சு போட்டாலும், "எல்லாம் நல்லதுக்கே"ன்னு நெனச்சு போட்டாலும், பேனா சரியா எழுதுதான்னு பாக்க போட்டாலும், நல்லதுக்கு போடற எல்லா சுழியும் "பிள்ளையார் சுழி" தான் !!!