Wednesday, March 21, 2012

கையெழுத்து !!!

எவ்ளோ நாளாச்சு ஒரு கடுதாசி போட்டு?

எப்போ பாத்தாலும் இந்த கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து தட்டிக்கிட்டே இருக்க வேண்டியது! முன்னாடி எல்லாம் பள்ளிக்கூடத்தில எழுத சொன்னப்ப, நோகும். ஆனா இப்போ கம்ப்யூட்டர்ல தட்டும் போது மட்டும் வெரலு வலிக்கலையா? வலிக்குது தான். அதையும் தாண்டி எதுக்கு தட்டறோம்? வயித்து பொழப்பு சாமி :-)

சரி, வேலையைத்தான் கம்ப்யூட்டர் ல தட்டி தட்டி செய்யணும். மனசுல இருக்கறத சொல்லணும்னாலும் இந்த இ-மெயில் தான் அனுப்பணுமா?

கொஞ்சம் வித்தியாசமா கையில எழுதி குடுத்து பாருங்களேன், அந்த கடுதாசிய :-)

அந்த சந்தோஷமே தனி தான்... எழுதறவருக்கும் படிக்கிறவருக்கும்! அது மட்டும் இல்ல... பொக்கிஷம் மாதிரி வெச்சிருப்பாங்க அந்த கடுதாசிய :-)

ஒரு தடவ முயற்சி பண்ணி பாருங்க.. அப்புறம் நீங்களே விட மாட்டீங்க :-)

No comments:

Post a Comment