Wednesday, February 8, 2012

திருநீறு !!!



கோவிலுக்கு போனோமா... சாமிய பாத்தோமா... கெளம்பினோமான்னு இல்லாமே, அதென்ன இடையிலே திருநீறு வெக்கிறது?

திருநீறுன்னா என்ன? எப்பிடி தயார் பண்றாங்க? எதுக்கு வெக்கிறோம்? சாமிக்கும் திருநீறுக்கும் என்ன சம்மந்தம்? 

இப்பிடி நெறைய கேள்வி மனசுல... தேடினேன் பாருங்க.... தேடினதுல ரெண்டு எடத்துல திருப்தியான பதில் கெடச்சுது... ஒண்ணு நம்ம விக்கிபீடியா, இன்னொண்ணு சாந்தன்.காம்

நீங்களும் படிச்சு பாருங்க... என்ன யோசிக்கறீங்க? என்னடா... சொந்தமா யோசிக்காம கடன்ல யோசிக்கறேன்னா? அட.... நல்லத யார் சொன்னா என்ன.... என்ன நான் சொல்றது?! சரி... அடுத்த நல்ல விஷயம் தேடி படிக்க போறேன்... படிச்சிட்டு வந்து சொல்றேன்...

Friday, February 3, 2012

கண் திருஷ்டி !!!



கண்ணு படப் போகுதா? எனக்கா? சீக்கிரம் சுத்தி போடுங்க !!!

அதென்னது சுத்திப் போடறது ?! எத சுத்திப் போடணும்?! ம்ம்... சொல்றேன்.

ஒரு மனுஷன் வாழ்க்கைல கொஞ்சம் சந்தோஷமா, நல்ல வேலை/தொழில், நல்ல குடும்பம் அப்படி இப்படி னு இருந்தா, ஒடனே அத பாத்து கொஞ்சம் ஏங்குறவங்க இருப்பாங்க... "அடடா அவன மாதிரியே நமக்கும் எல்லாம் நல்லா நடந்தா நல்லாருக்குமே" ன்னு. இன்னும் சில பேர் எப்படி யோசிப்பாங்க தெரியுமா? "ஹ்ம்ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருக்கு.... ஆனா என்னமோ தப்பு இருக்கு... சரி இல்ல... இதெல்லாம் எங்க நிலைக்க போகுது..." இது எப்படி இருக்கு?!

இந்த மாதிரி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அந்த மனுஷன பாப்பாங்க. இந்த பார்வையத்தான் "கண் திருஷ்டி" ம்பாங்க. இப்படி பாக்கறதால அவங்களோட கெட்ட அதிர்வுகள் (Negative Vibes) அந்த மனுஷனுக்கும் போய் சேருது. சில சமயங்களில், அது அவனை பாதிக்கலாம், சில சமயங்களில் பாதிக்காமலும் போகலாம். அது அவனுடைய மனோபலத்தை பொருத்ததாம் !!!

இந்த கண் திருஷ்டிக்கு நம்ம தாத்தா பாட்டிகள் தேடின வழி தான் "கண் திருஷ்டி கழிக்கறது". அதாவது நம்மள சுத்தி இருக்க கெட்ட அதிர்வுகள உப்பு, மிளகு மாதிரியான கிருமி நாசினி பொருட்களைக் கொண்டு சுத்தி எடுத்து வீசிடலாம்னு அவங்க நம்பினாங்க. நம்பினதையே செஞ்சும் பாத்தாங்க. அது ஓரளவுக்கு பலன் கொடுக்கவே, நம்மளும் அவங்க செய்தத தொடர்ந்து செய்யறோம்.

முடியல என்னால !!! யாராவது எனக்கு கொஞ்சம் சுத்திப் போடுங்களேன் !!!

விளக்கு !!!



விளக்கு வைப்போமா ?

ஏன்? எதுக்கு? விளக்கு வெச்சாத்தான் சாமி வீட்டுக்கு வருமா? இப்பிடியே கேள்வி கேட்டே காலம் கடத்திருவோம்... ஹ்ம்ம்ம்...

பதில் தேடுவோமா? நம்ம தேடிட்டோம்லே... தேடிப்புடிச்சி படிச்சதில புரிஞ்சது இது தான்.

வெளிச்சம் ஞானத்தையும் இருட்டு அஃஞானத்தையும் குறிப்பது. வெளிச்சம் வந்தா இருட்டு விலகறது மாதிரி ஞானம் அஃஞானத்தை விலக்கிடுது!

இப்போ, சாமி தான் எல்லாம் தெரிஞ்சவராச்சே! அப்போ, சாமி = ஞானம். ஆனா, ஞானம் = வெளிச்சம் ஆச்சே ! அதனால சாமி = வெளிச்சம். அதனாலதான் விளக்கு ஏத்தி வெச்சு நம்ம மனசுல இருக்க இருட்டு எல்லாம் போக்கணும் சாமி-ன்னு வேண்டிக்கறோம்.

ஆனா, எந்த விளக்கு போட்டாலும் தானே இருட்டு போகுது? எதுக்கு எண்ணெய் விளக்கு வெக்கணும்? ம்ம்ம்... அதாவது, எண்ணெய் விளக்குல நாம விடற எண்ணெய், நம்முடைய தீய எண்ணங்கள். திரி, நம்முடைய அகங்காரம். நாம விளக்கு வெக்கும்போது, வெளிச்சமாகிய ஆன்ம ஞானம் நம்முடைய தீய எண்ணங்களை (எண்ணெய்) மெல்ல அழித்து, அகங்காரத்தையும் (திரி) கடைசில அழிச்சிடும். இதுக்கு தான் எண்ணெய் விளக்கு வெக்கிறது.

ஒரு சின்ன விளக்கு வெக்கிறதுக்கு இவ்ளோ பெரிய உள்ளர்த்தம். ம்ம்ம்ம். சரி, நான் போய் விளக்கு வெச்சிட்டு வர்றேன். அடுத்தது எத பத்தி எழுதறதுன்னு ஞானம் வருதான்னு பாப்போம் !!!